திங்கள், 22 ஏப்ரல், 2013

108 விநாயகா போற்றி

108 விநாயகா போற்றி
இதனை சொல்வதற்கு முன்...
நட்சத்திரம்..................... நாள்சேர்
பெயர்.............................பெயர்க்காக
செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!  இதனை கூறிவிட்டு பின் 108 போற்றியை கூறுங்கள்..

1. ஓம் அத்தி முகனே போற்றி
2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3. ஓம் அம்மையே அப்பா போற்றி
4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5. ஓம் அமரர்கள் கோனே போற்றி
6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7. ஓம் அங்குச பாஸா போற்றி
8. ஓம் அரு உருவானாய் போற்றி
9. ஓம் அறுமுகன் அண்ணா போற்றி
10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12. ஓம் அவல், பொரி,அப்பம், அருந்துவோய் போற்றி
13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வோய் போற்றி
14. ஓம் ஆதி மூலமே போற்றி
15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16. ஓம் ஆரா அமுதா போற்றி
17. ஓம் இருள் தனைக் கடிவோய் போற்றி
18. ஓம் இடையூறு களைவோய் போற்றி
19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21. ஓம் ஈசனார் மகனே போற்றி
22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25. ஓம் உண்மை நெறியாளா போற்றி

26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28. ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33. ஓம் எண்குண சீலா போற்றி
34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36. ஓம் ஏக நாயகனே போற்றி
37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
38. ஓம் ஒளவையார்க் கருள்வாய் போற்றி
39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47. ஓம் கணத்து நாயகனே போற்றி
48. ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49. ஓம் கலைஞானக் குருவே போற்றி
50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
51. ஓம் கற்பகக் களிறே போற்றி
52. ஓம் கண்கண்ட தேவே போற்றி
53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி
54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
57. ஓம் சர்வ லோகேசா போற்றி
58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
59. ஓம் சுருதியின் முடிவே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
62. ஓம் நாதனே, கீதா போற்றி
63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி
65. ஓம் தரும குணாளா போற்றி
66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
67. ஓம் தூயவர் துணைவா போற்றி
68. ஓம் துறவிகள் பொருளே போற்றி
69. ஓம் நித்தனே, நிமலா போற்றி
70. ஓம் நீதி சால் துரையே போற்றி
71. ஓம் நீல மேனியனே போற்றி
72. ஓம் நிர்மலி வேணியா போற்றி
73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
74. ஓம் பெருச்சாளி வாகனா போற்றி
75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
78. ஓம் பவப்பிணி ஒழிப்பாய் போற்றி
79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
80. ஓம் முத்தியைத் தருவாய் போற்றி

81. ஓம் வேழ முகத்தாய் போற்றி
82. ஓம் வேட்கையைத் தணிவிப்பாய் போற்றி
83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
84. ஓம் வேதாந்த விமலா போற்றி
85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
87. ஓம் செல்வம் தருவாய் போற்றி
88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
90. ஓம் சினம், காமம் தவிர்ப்பாய் போற்றி
91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
98. ஓம் அமிர்த கணேசா போற்றி
99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி
101. ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
102. ஓம் சித்தி விநாயகா போற்றி
103. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
104. ஓம் சுந்தர விநாயகா போற்றி
105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
106. ஓம் அனைத்தும் ஆனாய் போற்றி
107. ஓம் ஆபத் சகாயா போற்றி
108. ஓம் அமிர்த கணேசா போற்றி




வியாழன், 14 மார்ச், 2013

16 விநாயகா போற்றி ஆக்கம் R.P.OM

16 விநாயகா  போற்றி
ஆக்கம்  R.P.OM



விநாயகனின் 16 திரு நாமங்கள்

ஓம்  ஏகதந்த  விநாயக போற்றி 
ஓம் ஹேரம்ப விநாயக போற்றி
ஓம் கபில  விநாயகா  போற்றி
ஓம் கஜகர்ண  விநாயகா  போற்றி
ஓம் கஜானன  விநாயகா  போற்றி 
ஓம் கணாத்யக்ஷ விநாயகா  போற்றி 
ஓம் சுமுக  விநாயகா  போற்றி 
ஓம் சூர்ப்பகர்ண  விநாயகா  போற்றி 
ஓம் ஸ்கந்த பூர்வஜ  விநாயகா  போற்றி 
ஓம் தூமகேது விநாயகா  போற்றி 
ஓம் லம்போதர  விநாயகா  போற்றி 
ஓம் வகரதுண்ட  விநாயகா  போற்றி 
ஓம் விகனராஜ  விநாயகா  போற்றி 
ஓம் விகட  விநாயகா  போற்றி 
ஓம் ஸ்ரீ சித்தி புத்தி  விநாயகா  போற்றி

16 பேறுகள் :
 அறிவு
அழகு
ஆயுள்
ஆரோக்கியம்
இளமை
கல்வி
சத்புத்திர பாக்யம்
சொர்ணம்
தைர்யம்
தான்யம்
நல்விதி
நுகர்ச்சி
புகழ்
பெருமை
வெற்றி

உபசாரம்  16
16 வகை உபச்சாரம்
தவிசளிக்கிறோம்
கை கழு நீர் தருகிறோம்
கால் கழு நீர் தருகிறோம்
முக்குடி நீர் தருகிறோம்
நீராட்டுகிறோம்
ஆடை சாத்துகிறோம்
முப்புரி நூறரல் செய்கிறோம்
தேய்வை பூசுகிறோம்
மலர் சாத்துகிறோம்
மஞ்சளரிசி தூவுகிறோம்
நறும்ம்புகை காட்டுகிறோம்
விளக்கிடுகிறோம்
கருப்பூரமேற்றுகிறோம்
அமுதம் ஏந்துகிறோம்
ஆடை காய் தருகிறோம்
மந்திர மலரால் அர்சிக்கிறோம் எங்கள் அன்பு கணபதி ராஜாவே .
16 திருநாமங்கள் 

6 விநாயகா six vinayaga கணபதியின் 6 படை வீடுகள் ஆக்கம் ஆர்.பி .ஓம் 8056156496

6 விநாயகா
ஆக்கம் ஆர்.பி .ஓம்  8056156496
*********************************************************************************
கணபதியின் 6 படை வீடுகள்
******************************
ஓம் திருவண்ணாமலை விநாயகா 

ஓம்  கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வர விநாயகா 
ஓம்  நாகப்பட்டினம் திருக்கடையூ அமிர்தகடேஸ்வர விநாயகா 
ஓம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர விநாயகா 
ஓம் காசி துண்டிவிநாயக விநாயகா 

ஓம் கடலூர் திருநாரையூ சித்தநாதேஸ்வரர் விநாயகா 
********************************************************************************************
முருகனின்  6 படை வீடுகள்
*****************************
ஓம் திருவண்ணாமலை விநாயகா 

ஓம் திருபரங்குன்ற விநாயகா 
ஓம் திருச்செந்தூர் விநாயகா
ஓம் பழனி  விநாயகா 
ஓம் சுவாமிமலை விநாயகா 
ஓம் திருத்தணிகை விநாயகா 
ஓம் பழமுதிர்ச்சோலை விநாயகா 
*****************************************************************************
பிள்ளையார்.. பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்..
******************************************************************************************
கணபதியை கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பார்கள். விநாயகரின் நாபி பிரம்மனின் அம்சமாகவும், முகம் விஷ்ணுவின் அம்சமாகவும், இடது பாகம் சக்தியின் அம்சமாகவும், வலது பாகம் சூரிய அம்சமாகவும், முக்கண் சிவனின் அம்சமாகவும் விளங்குகிறது. இதனால் விநாயகர் ஒருவரை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைப்பதாக விநாயகர் புராணம் கூறுகிறது.
விநாயகர் - தனக்கு மேல் யாரும் இல்லாத வெற்றி நாயகர்
பிள்ளையார் - சிவசக்தியின் மூத்த பிள்ளை
கணேஷ், கணபதி - சிவனின் பூத கணங்களுக்கு தலைவர்
விக்னேஸ்வரர் - தடைகளைத் தகர்ப்பவர்
கஜமுகன், கஜராஜன் - யானை முகம் கொண்டவர்.
முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் இருப்பதைப்போலவே, விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. இவை விநாயகர் தலங்களில் பிரதானமானவையாக கருதப்படுகிறது.
முதல் படைவீடு - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு - கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு -
நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்
 திருக்கோயில்
நான்காம் படைவீடு - 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு - 
காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு - 
கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
யார் பட்டம் ஏன் வந்தது?
தாயை தாயார், தந்தையை தந்தையார் மாமியை மாமியார், என்று யார் அடைமொழி போடுவது ஒரு மரியாதைக்காக. நம் வீட்டு பிள்ளைகளை பிள்ளையாரே வருக என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், சிவ பார்வதியின் மூத்த பிள்ளை தெய்வக்குழந்தை இல்லையா? எனவே, தெய்வத்துக்குரிய மரியாதையுடன் பிள்ளையார் என்கிறோம். இந்த தெய்வத்தின் அருள்பெற்ற ஒரு பெண்மணியும் யார் பட்டம் பெற்றார். தமிழ் மூதாட்டி அவ்வையை பிள்ளையார், தன் தும்பிக்கையால் தூக்கி கைலாயம் கொண்டு போய் சேர்த்தார். எனவே, இந்தத் தெய்வப்புலவரையும் அவ்வையார் என்கிறோம்.
************************************************************************
விநாயகரை கடலில் கரைப்பது ஏன்?
********************************
ஒருசமயம் பார்வதி தேவி, கங்கையில் நீராடிய போது தன் உடலிலிருந்த அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானை முகமும், மனித உடலும் கொண்டிருந்தது. அதை அவள் கங்கையில் எறிந்தாள். அந்த பொம்மை விநாயகராக வெளிப்பட்டது. இவரை பார்வதியும் கங்கையும் பிள்ளையாக ஏந்தி கொண்டனர். இதனால், விநாயகருக்கு பார்வதியும், கங்கையும் அன்னையர் ஆனார்கள். இந்த காரணத்தினால் தான் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கங்கையில் கரைக்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. பின்னர் கங்கையும் சேரும் இடம் கடல் என்பதால் விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
விக்ன ராஜர்
விநாயகருக்கு விக்ன ராஜர் என்ற பெயர் உண்டு. வரேணியன் என்ற மன்னனின் மனைவி புட்பகை கருவுற்றிருந்தாள். விநாயகர் கருவிலிருந்த குழந்தையை மறைத்து அதற்கு பதில் யானை முகத்துடன் தானே குழந்தையாக அவதரித்தார். இதனைக் கண்ட ராஜா குழந்தையை காட்டில் விடும் படி உத்தரவிட்டார். காவலர்கள் குழந்தையை காட்டில் பராசரமுனிவர் ஆஸ்ரமத்தின் அருகே விட்டனர். முனிவர் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். அப்போது கிரவுஞ்சன் என்ற அசுரன் பெருச்சாளி உருவெடுத்து அங்கிருந்த முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தான். இவனுக்கு விக்னன் என்ற பெயரும் உண்டு. விநாயகர் அவனை அடக்கி தன் வாகனமாக்கி கொண்டார். அன்றிலிருந்து விநாயகர் விக்னராஜா ஆனார்.
*********************************************************************************
பிள்ளையாரின் ஆயுதங்கள்
************************
பொதுவாக பிள்ளையார் ஐந்து கைகளில் மேல் இரண்டு கைகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார். இவை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். இவரது ஆயுதங்கள் மொத்தம் 29. பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாக பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி, தண்டம், கமண்டலம், பரசு, கரும்புவில், சங்கம், புஷ்ப பாணம், கோடரி, அட்சர மாலை, சாமரம், கட்டு வாங்கம், சக்கரம், அகல் விளக்கு, வீணை ஆகியவை.
********************************************************************************
விநாயகரின் 16 திருநாமங்கள்
**************************
பாலகணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்னராஜா கணபதி, க்ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, புவனேச கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி.
*****************************************************************************
வீணை விநாயகர்
****************
விநாயகரை கையில் மோதகம், கொழுக்கட்டை வைத்தபடி பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரை சரஸ்வதிக்குரிய வீணையை கைகளில் வைத்தபடி ஈரோடு அருகிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கு அம்பாள் வேதநாயகி சன்னதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் இவர் சிற்ப வடிவமாக இருக்கிறார். புலிக்கால்களுடன் இருக்கும் இவருக்கென தனி வழிபாடு கிடையாது. அம்பாள் வேதநாயகியின் இடது காலடியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இசைப் பயிற்சி பெறுபவர்கள் அம்பாள் சன்னதி முன்பு நின்று இவ்விரு விநாயகர்களையும் தரிசித்தால், இசைக்கலையில் சிறப்பான தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை.
*********************************************************************************
அருகம்புல் அணிய ஏற்ற நட்சத்திரங்கள்
***********************************
விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, ஆகிய 16 நட்சத்திர நாட்களில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.
*****************************************************************************
அபிஷேக நட்சத்திரங்கள்
***********************
விநாயகருக்கு எந்தெந்த அபிஷேகம் என்னென்ன நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் தெரியுமா?
பாலபிஷேகம் - உத்திராடம்
சந்தன அபிஷேகம் - பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம்
தேனபிஷேகம் - ரேவதி
திருநீறு அபிஷேகம் - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம்
மஞ்சள் அபிஷேகம் - மிருகசீரிஷம், பூரம், அனுஷம்
செந்தூரக் காப்பு - திருவாதிரை
அன்னாபிஷேகம் - பூரம்
ஸ்வர்ண (தங்க இலை) அபிஷேகம் - திருவோணம்
*********************************************************************************
விநாயகரின் ஐந்து கைகள்
***********************
விநாயகப்பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. இதனால் இவர் ஐந்து கரத்தான் என அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து கைகளும் சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.
அங்குசம் தாங்கிய வலது மேல் கை - சி
பாசம் பற்றிய இடது மேல் கை - வா
தந்தம் ஏந்திய வலது கை - ய
மோதகமுள்ள இடது கை - ந
துதிக்கை - ம
*********************************************************************************
வெல்லப் பிள்ளையார்
********************
விநாயகரை மஞ்சள், வெள்ளெருக்கு வேர் ஆகியவைகளில் செய்து வழிபடுவார்கள். அத்துடன் சாணம், புற்றுமண், வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் செய்து வழிபாடு செய்தால் மறுபிறப்பில்லா நிலையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.
*********************************************************************************
விநாயகர் விளக்கு
****************
விநாயகர் சதுர்த்தியன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் விளக்கேற்றி வழிபடலாம். இதற்காக விநாயகர் உருவத்துடன் அமைந்த விளக்குகள், குத்து விளக்கின் உச்சியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பிலும் கிடைக்கிறது. விநாயகர் தன் கையில் விளக்கை பிடித்து, அதில் தும்பிக்கையை வைத்தபடி ஒரு விளக்கு வந்துள்ளது. பரந்த வயிற்றுடன் இருக்கும் விநாயகரின் வயிறு, உலகத்தை குறிக்கிறது. அதாவது ஜீவராசிகள் அனைத்தும் அவருக்குள் ஐக்கியம் உணர்த்தும் வகையில் இவ்விளக்கு உள்ளது.
********************************************************************************
கல்யாண வரம் தரும் கட்டை பிரம்மச்சாரி
*************************************
தனக்கொருத்தி இல்லாமல் தனித்திருக்கும் சுவாமியை சுற்றிச்சுற்றி வந்து, எனக்கொருத்தி வேண்டுமென கேட்கிறார்கள் பிரம்மச்சாரிகள். கல்யாணம் செய்து கொள்ளாத இந்த கட்டைப் பிரம்மச்சாரியிடம் இதை கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது தெரியுமா? வள்ளியை மணம் முடிக்க முருகப்பெருமாள் பகீர தப்பிரயத்தனம் செய்து பார்த்தார். கதை நடக்கவில்லை. கடைசியில் அவர் கூப்பிட்டது தன் அண்ணனைத் தான்! அவர் யானை வடிவில் வந்தார். வள்ளியை விரட்டினார். அவள் பயந்து போய், வேடன் வடிவில் வந்த முருகனைத் தழுவி நின்று கொண்டாள். காதல் மலர்ந்தது. கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காத ஒன்றை யாருக்கும் கிடைக்க விடக்கூடாது என்ற எண்ணமுள்ளவர்கள் தான் உலகத்தில் அதிகம். ஆனால், விநாயகரோ, தனக்கு இல்லாததை கூட பிறருக்கு தரும் அருள் வள்ளல். அதனால் தான் பிரம்மச்சாரிகள் அவரைத் தேடிப் போகிறார்கள்.
*********************************************************************************************



புதன், 13 மார்ச், 2013

64 விநாயகா sisty four ஆயகலைகள் அறுபத்து நான்கு

64 விநாயகா 
ஆயகலைகள் அறுபத்து நான்கு 

1. அக்கரவிலக்கணம் 

2. இலிகிதம் 

3. கணிதம் 

4. வேதம் 

5. புராணம் 

6. வியாகரணம் 

7. நீதி சாஸ்திரம் 

8. ஜோதிடம் 

9. தர்ம சாஸ்திரம் 

10. யோக சாஸ்திரம் 

11. மந்திர சாஸ்திரம் 

12. சகுன சாஸ்திரம் 

13. சிற்ப சாஸ்திரம் 

14. வைத்திய சாஸ்திரம் 

15. உருவ சாஸ்திரம் 

16. இதிகாசம் 

17. காவியம் 

18. அலங்காரம் 

19. மதுர பாடனம் 

20. நாடகம் 

21. நிருத்தம் 

22. சத்தப்பிரும்மம் 

23. வீணை 

24. வேணு (புல்லாங்குழல்) 

25. மிருதங்கம் (மத்தளம்) 

26. தாளம் 

27. அத்திரப் பரிட்சை 

28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்) 

29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்) 

30. கஜப் பரிட்சை (யானை எற்றம்) 

31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்) 

32. இரத்தினப் பரிட்சை 

33. பூமிப் பரிட்சை 

34. சங்கிராம விலக்கணம் 

35. மல்யுத்தம் 

36. ஆகருடனம் 

37. உச்சாடனம் 

38. வித்து வேடனம் (ஏவல்) 

39. மதன சாஸ்திரம் 

40. மோகனம் 

41. வசீகரணம் 

42. இரசவாதம் 

43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை) 

44. பைபீலவாதம் (மிருக பாஷை) 

45. கவுத்துவ வாதம் 

46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்) 

47. காருடம் 

48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்) 

49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்) 

50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்) 

51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) 

52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது) 

53. அதிரிசியம் 

54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை) 

55. மகேந்திர ஜாலம் 

56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்) 

57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்) 

58. வாயுஸ்தம்பம் 

59. திட்டி ஸ்தம்பம் 

60. வாக்கு ஸ்தம்பம் 

61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்) 

62. கன்னத்தம்பம் 

63. கட்கத்தம்பம் 

64. அவத்தைப் பிரயோகம்
******************************

40 விநாயகா forty


40 விநாயகா 

40 கோத்திர விநாயகா 


40ஸம்ஸ்காரங்களாவன:
1.கர்பாதானம், 2.பும்ஸவனம், 3.ஸீமந்த்ம், 4.ஜாதகர்ம, 5.நாமகரணம், 6.அன்னப்ராசனம், 7.சௌளம், 8.உபநயனம், 9.ப்ராஜாபத்ய, சௌம்ய, ஆக்நேய, வைச்வதேவ என்று நான்கு வேத வ்ரதங்கள், 13.ஸமாவர்தனம், 14.விவாஹம், தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத ப்ரும்ம யஜ்ஞம் என்று பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

அஷ்டகா-அந்வஷ்டகா, பார்வணம், ஸ்தாலீபாகம், ஆக்ரஹாயணீ, ச்ராவணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என்று ஏழு பாக யஜ்ஞங்கள், அக்நி ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ச,பூர்ணமாசம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பசுபந்தம், ஸெளத்ராமணி என்று ஏழு ஹவிர் யஜ்ஞங்கள் அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்று 7 ஸோம ஸம்ஸ்தைகள் ஆக 40 ஸம்ஸ்காரங்கள் இதில் பாதி ஸ்மார்த்த கர்மா, பாதி யஜ்ஞங்களான ச்ரௌத கர்மா, இப்படி 40 ஸம்ஸ்காரங்களாலே ப்ராஹ்மணன் ஜ்வலிக்கிறான். எப்படி பாத்திரம் தேய்க்க தேய்க்க ஜ்வலிக்கிறதோ அதுமாதிரி இந்த ஸம்ஸ்காரங்கள் கர்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் இதெல்லாம் கர்பத்லேயே அவனுக்கு ப்ராஹ்மணத்துவத்த ஏற்படுத்தக்கூடிய ஸம்ஸ்காரங்கள். இதெல்லாம் செஞ்சா என்ன செய்யாத போனா என்ன என்று நினைக்கக் கூடாது. ஒரு ஸம்ஸ்காரத்த ஒருத்தன் செய்யலேன்னா அடுத்த ஸம்ஸ்காரத்துக்கு அவனுக்கு தகுதி கிடையாது.